Ad Widget

பொதுமக்கள் தமது பிரதேசங்களிலேயே தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டும்!

பொதுமக்கள் தங்கள் சொந்த கிராம அலுவலகர் பிரிவு அல்லது சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இருந்து மட்டுமே கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு இராணுவ தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுள்ளார்.

ஒவ்வொரு பகுதிக்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவுகள் கொடுக்கப்படுவதால், தடுப்பூசியை தங்கள் சொந்தப் பகுதியிலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பல தடுப்பூசி மையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.

நாட்டின் கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் நேற்றுவரை தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 லட்சத்து 73 ஆயிரத்து 120 ஆகும்.

Related Posts