Ad Widget

பேக்கரிகளில் தராசு கட்டாயம்

பேக்கரி மற்றும் பேக்கரி உற்பத்தி செய்யும் இடங்களில் , தின்பண்டங்களின் நிறையை நுகர்வோர் அறிந்துகொள்வதற்காக அவ்வாறான இடங்களில் தராசு வைக்கப்படுவது கட்டாயமாகும் என்று நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம், பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் நிலையங்களுக்கும் கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பல்வேறான நிறைகளில் பாண் விற்பனை செய்யப்படுவதனால் அதற்கு ஏற்றவகையில் விலைகளை நிர்ணயிக்குமாறு நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற சட்டத்தின் பிரகாரம் ஒரு இறாத்தல் பாணினின் நிறை 450 கிராம் ஆகும். என்பதுடன் அதன் விலை 54 ரூபாவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts