Ad Widget

பெண்ணைக் கடத்திய இரு இளைஞர்கள்! மக்களால் மடக்கிப் பிடிப்பு!

மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களால் கடத்திச் செல்லப்பட்ட 18வயதுடைய இளம்பெண் ஒருவர் மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று சித்தங்கேணி பேருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

தனியார் வகுப்பு முடிந்து வீடு திரும்புவற்காக சித்தங்கேணி பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த வேளை மோட்டார் சைக்கிளில் முகம் புலப்படாதவாறு தலைக்கவசத்தை முழுமையாக அணிந்து வந்த இரு இளைஞர்கள் அப்பெண்ணை கடத்திச் சென்றனர்.

ஆனால் அப்பெண் கூச்சலிடவே குறித்த வீதியால் வந்த மக்கள் கடத்திச் சென்ற இளைஞர்களை விடாது துரத்தி நவாலி சுடலைக்கு அருகாமையில் வைத்து மடக்கிப் பிடித்து வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைத்ததுடன் இளம்பெண்ணையும் காப்பாற்றினர்.

மேலும் கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts