Ad Widget

பெண்ணின் கூந்தலை கத்தரித்த மர்மநபர்கள்

யாழ்ப்பாணம், தொண்டைமானாறு, ஊறணி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் செவ்வாய்க்கிழமை (23) இரவு அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் சிலர், வீட்டிலிருந்த பெண்ணின் கூந்தலை கத்தரித்துவிட்டுச் சென்றதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பெண்ணின் கணவர் வெளிநாட்டிலுள்ள நிலையில் தனது மூன்று பிள்ளைகளுடன் அப்பெண் தனித்து வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சிலர், பெண்ணை பலவந்தமாக மடக்கி பிடித்து கூந்தலை கத்தரித்துள்ளனர். இதன்போது, இழுபறிப்பட்டதில் பெண்ணின் 13 வயது மகளுக்கு வெட்டுகாயங்கள் ஏற்பட்டது.

இது தொடர்பில் மேற்படி பெண்ணால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.

Related Posts