Ad Widget

பெண்கள் சிறுவர் பாதுகாப்பு செயலமர்வு

பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (08) இடம்பெற்றது.

சாவகச்சேரி நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்காக நடைபெற்ற இந்த செயலமர்வு, சாவகச்சேரி நீதவானும், மாவட்ட நீதவானுமாகிய ஸ்ரீநிதி நந்தசேகரம் தலைமையில் இடம்பெற்றது.

இந்த செயலமர்வில் இலங்கை சட்ட உதவி நிலையத்தின் சட்ட ஆலோசகர் சஜீவினி ஆரியரத்ன, பருத்தித்துறை தலைமை பொலிஸ் பயிற்சி நிலைய விரிவுரையாளர் புத்திக்க பாலச்சந்திரா ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள்.

சிறுவர் மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள், அந்த சட்டங்கள் மூலம் எவ்வாறு சிறுவர் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், பெண்கள் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பொலிஸார் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன், அதிகரித்துள்ள சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பொலிஸார், பொதுமக்களுக்கு எவ்வகையில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்றவை தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன.

இந்த செயலமர்வில் சாவகச்சேரி, கொடிகாமம் ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டார்கள்.

Related Posts