Ad Widget

புலிச்சின்னத்தை உடம்பில் பச்சை குத்தியிருந்த புலம்பெயர் தமிழர் விடுதலை

பிரான்ஸிலிருந்து யாழ் வந்திருந்த புலம்பெயர் இளைஞர் ஒருவர் புலி உருவத்தை பச்சை குத்தியிருந்ததால் பொலிஸாரால் கைதான சம்பவம் நேற்று இடம்பெற்றது.அவ்விளைஞர் யாழ். நீதவான் மா. கணேசராசா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். எனினும், அவருக்கு எதிராக பொலிஸார் குற்றச்சாட்டுகள் எதையும் முன்வைக்காத நிலையில் அவ்விளைஞரை நீதவான் விடுதலை செய்தார்.

இவ்விடயம் தொடர்பாக யாழ். பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் சமன் சிஹேர கூறுகையில்,

பிரான்ஸை பிறப்பிடமாகக் கொண்ட இளைஞன் தனது கையில் புலிச் சின்னத்தை பச்சை குத்தியிருந்ததால் நேற்று கைது செய்யப்பட்டார். அவரது தாயார் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.

கைதான இளைஞனிடம் நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டோம். விசாரணைகளின் முடிவில் அவ்விளைஞனுக்கும் புலிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரியவந்தது.

பச்சை குத்துமிடத்தில் குறித்த சின்னம் தன்னை கவர்ந்ததால் தான் அதனை பச்சை குத்திக் கொண்டதாக அவ்விளைஞன் விசாரணைகளின்போது எம்மிடம் தெரிவித்தார்.இதனையடுத்து, நீதவான் எந்தவித தண்டனையுமின்றி அவ்விளைஞனை விடுதலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

Related Posts