Ad Widget

புலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் காணொளிகளை முடிந்தால் வெளியிடுங்கள் – கருணாவிற்கு சிவாஜி சவால்

விடுதலைப்புலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் ஆதாரங்களை வெளியிடுமாறும் கருணா அம்மானிடம் சவால் விடுவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே இந்த பகிரங்க சவாலினை விடுத்தார்.

செல்வம் அடைக்கலநாதனும் சிவாஜிலிங்கமும் விடுதலைப்புலிகளின் மேடையிலும் அவர்களுக்கு ஆதரவாக பேசிய காணொளிகளும் தன்னிடம் இருப்பதாகவும் அந்த காணொளிகளை வெளியிட்டால் இவர்களின் நிலை தெரியும் என கூறியிருந்தார்.

அவ்வாறு பேசியிருந்தால் நாம் அவற்றினை ஏற்றுக்கொள்வோம் என தெரிவித்திருந்த சிவாஜிலிங்கம், உண்மையை கூறுவதற்கு தான் ஒருபோதும் பயப்பட போவதில்லை என்றும் கூறினார்.

மக்களின் நலனுக்காகவும் அவர்களின் விடுதலைக்காகவும் எந்த நேரத்திலும் சாவினை தழுவிக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts