Ad Widget

புலம்பெயர்ந்தோருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் – வடக்கு முதல்வர்

vicky0vickneswaranபோருக்கு பின்னர் மீள் அமைப்புக்களை மேற்கொள்வதற்காக புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படுவது அவசியம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

போரின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களின் சமூக பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இவ் விடயம் இலங்கையின் பாதுகாப்பு விடயத்துடன் தொடர்புடையதாக இருக்கின்றது ஆனால் இது நடைமுறைக்கு சாத்தியமாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோர் மத்தியிலேயே நிதி மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் பொதிந்துள்ளன. எனவே அவை போரின் பின்னர் வடக்கு கிழக்கை கட்டியெழுப்ப அவசியமான விடயமாகும்.

இதனால் இரட்டை குடியுரிமை என்பது முக்கியமான அம்சமாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை வெளிநாடுகளில் வசிப்போரிடம் இருந்து நிதி வருகையை அனுமதிக்க ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டமை குறித்து தான் மகிழ்சசி அடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts