Ad Widget

புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்ட இரு இளைஞர்கள் சாவகச்சேரி காவல்துறையில் சரண்!

பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த யாழ்ப்பாண இளைஞர்கள் இருவர் சாவகச்சேரி காவல்துறையில் சரணடைந்துள்ளனர்.

மட்டுவில் வடக்குப் பகுதியைச் சேர்ந்த குறித்த இரண்டு இளைஞர்களையும் இன்று(திங்கட்கிழமை) சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் ஆவா குழு என அழைக்கப்படும் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே தேடப்பட்டு வந்தநிலையில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) சாவகச்சேரி காவல்துறையில் சரணடைந்துள்ளனர்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் ஆவா குழு என அழைக்கப்படும் ஆயுதக் கும்பலால் பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts