‘புரிந்துணர்வுகள் எமக்குள் தேவை. அதனை நீங்கள் செயலில் காட்டி உள்ளீர்கள்’ : ஆனந்த வீரசேகர தேரர்

புரிந்துணர்வுகள் எமக்குள் தேவை. அதனை நீங்கள் செயலில் காட்டி உள்ளீர்கள்’ என ஆனந்த வீரசேகர என்ற தேரர் தன்னிடம் தெரிவித்ததாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார்.

அம்பாறையைச் சேர்ந்த தேரரான ஆனந்த வீரசேகர, யாழ். மாவட்ட இராணுவத் தளபதி தர்ஷன ஹெட்டியாராய்ச்சி ஆகியோர் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை, யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (08) சந்தித்துக் கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடல் தொடர்பில் நீதிபதி மா.இளஞ்செழியன் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related Posts