Ad Widget

புதூரில் வீசப்பட்ட ஆயுதங்கள் -பெண் உள்ளிட்ட மூவர் கைது!!

வவுனியா புதுர்ப் பகுதியில் கைப்பற்றிய கைத் துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுர்ப் பகுதியில. சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய நபர், பொலிசாரைக் கண்டவுடன் கையில் இருந்து பை ஒன்றினை தூக்கி எறிந்து விட்டுத் தப்பியோடினார். பையில் இருந்து ஓர் கைத்துப்பாக்கி , 4 எறிகுண்டு , 2 கைத் தொலைபேசி என்பன கடந்த முதலாம் திகதி மீட்கப்பட்டது என்று கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து மறுநாள் புதுர்ப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கனகராயன்குளம் , ஆலங்குளம் , புதுக்குளம் பகுதிகளில் படையினரும் பொலிஸாரும் இனைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களிலேயே மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

Related Posts