Ad Widget

புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது!

எதிர்வரும் 15 நாட்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த புதிய சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைய புதிய வழிகாட்டல்களுக்கு அமைய, திருமண மண்டபத்தின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மாத்திரமே திருமண நிகழ்வுகளில் பங்கேற்க முடியும்.

அத்துடன் அவர்களுள் 200 பேர் அளவிலானவர்களே கலந்து கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் திறந்தவெளி திருமண நிகழ்வுகளில் 250 இற்கும் மேற்பட்டோர் பங்கேற்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அற்ற மரண சடங்குகள் 24 மணி நேரத்தில் நிறைவு செய்யப்பட வேண்டும் என்பதுடன், அந்த சடங்குகளில் 20 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை ஒமிக்ரோன் வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts