Ad Widget

புகைப்பிடித்த மாணவர்கள் கைது!

யாழ். துன்னாலை தெற்கு பகுதியில் பாடசாலை சீருடையுடன் புகைப்பிடித்த மூன்று பாடசாலை மாணவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு பெற்றோர்கள் முன்னிலையில் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

துன்னாலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் இந்த மூன்று மாணவர்களும் பாடசாலை நேரத்தில் சீருடையுடன் மதில் ஒன்றில் ஏறியிருந்து புகைப்பிடித்து கொண்டிருந்துள்ளனர்.

இதனை அவதானித்த பொதுமக்கள் நெல்லியடி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து அவ்விடத்துக்கு சென்ற பொலிஸார் மூவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

தொடர்ந்து, மாணவர்கள் அவர்களது பெற்றோர் முன்னிலையில் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts