Ad Widget

புகைப்படமெடுத்த 17 வயது சிறுவன் – சிலுவையில் அறையப்பட்டு படுகொலை

சிரியாவிலுள்ள ஐ.எஸ். போராளிகளின் தலைமையகத்தை புகைப்படமெடுத்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவனை போராளிகள் பகிரங்கமாக 3 நாட்களாக சிலுவையில் அறையப்பட்டு படுகொலை செய்துள்ளனர்.

The-crucified-young-man-Abdullah-Bushi-via-Iraqi-News

இது தொடர்பில் பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளது.

ரக்கா நகரிலுள்ள ஐ.எஸ். போராளிகளின் தலைமையகத்தை புகைப்படமெடுத்த மேற்படி சிறுவன் அந்தப் புகைப்படங்கள் ஒவ்வொன்றிற்கும் 500 துருக்கிய லிரா பெறுமதியான பணத்தைப் பெற்ற நிலையில் போராளிகளால் பிடிக்கப்பட்டான்.

இதனையடுத்து அந்த சிறுவனை சிலுவையில் அறைந்த போராளிகள் அவனது கழுத்தில் மேற்படி சிறுவன் மத கொள்கைகளுக்கு எதிராக நடந்து கொண்டதுடன் தனது மதத்தையும் கைவிட்டுள்ளதாக குறிப்பிட்டு கடதாசி அட்டையொன்று தொங்கவிடப்பட்டுள்ளது.

மேற்படி சிறுவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் காட்சி ஐ.எஸ். போராளிகளால் சிறுவனது கழுத்தில் தொங்கவிடப்பட்டது.

Related Posts