Ad Widget

புகலிடக் கோரிக்கையாளர்கள் 157 பேரும் நவ்றுத் தீவுக்கு மாற்றம்

மேற்கு ஆஸ்திரேலிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் அனைவரும் இந்தியா திரும்ப மறுத்ததை தொடர்ந்து நவ்றுத் தீவுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

nouru-aus

இந்தியத் தூதரக அதிகாரிகளை புகலிடக்கோரிக்கையாளர்கள் சந்திக்க மறுத்ததை தொடர்ந்தே இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலியா எடுத்துள்ளது.

ஆஸி. குடிவரவுத்துறை அமைச்சர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர்கள் இனிமேல் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார்கள், அத்துடன் ஆஸ்திரேலியாவிலும் தங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மூன்று விமானங்கள் மூலமாக அவர்கள் நவ்றுவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஆஸ்திரேலிய அரசாங்கம், இரவோடு இரவாக அகதிகளை நவ்றுவுக்கு கடத்தியுள்ளது என்று ஈழ அகதிகள் சார்பாகக் குரல் கொடுத்துவரும் அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

Related Posts