Ad Widget

பிலிப்பைன்ஸை தாக்கிய ‘ரம்மசுன்’ சூறாவளி; 13 பேர் உயிரிழப்பு

பிலிப்­பைன்ஸை புதன்­கி­ழமை தாக்­கிய ரம்­மசுன் சூறா­வ­ளியில் சிக்கிக் குறைந்­தது 13 பேர் பலி­யா­ன­துடன், பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் இட­ம்பெ­யர்ந்­துள்­ள­னர். இந்த சூறா­வ­ளியால் தலை­ந­க­ரிலும் அந்­ந­க­ருக்கு நூற்­றுக்­க­ணக்­கான கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள மீன்­பிடிக் கிரா­மங்­க­ளி­லு­முள்ள வீடு­களின் கூரைகள் கடும் சேதத்­துக்­குள்­ளா­ன­துடன் மரங்­களும் சரிந்­து­ வி­ழுந்­துள்­ளன.

rammasun

தலை­ந­கரில் சூறா­வ­ளியால் வாக­னங்கள் பலவும் புரட்­டப்­பட்­டுள்­ளன. மேற்­படி சூறா­வளி பிர­தான தீவான லுஸனை மணிக்கு 185 கிலோ­மீற்றர் வேகத்தில் தாக்­கி­யுள்­ளது.

இந்த சூறா­வ­ளி­யை­ய­டுத்து பிராந்­தி­யத்­தி­லுள்ள அர­சாங்க அலு­வ­ல­கங்­களும் பாட­சா­லை­களும் மூடப்­பட்­டுள்­ள­துடன் விமான சேவை­களும் இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ளன.

‘கிளென்டா’ என செல்­ல­மாக அழைக்­கப்­படும் இந்தச் சூறா­வளி கார­ண­மாக 370,000 பேருக்கும் அதி­க­மானோர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

மேற்­படி சூறா­வளி முதன்­மு­த­லாக தாக்­கிய கிழக்கு அல்பே மாகா­ணத்­தி­லி­ருந்தே அதி­க­ள­வானோர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். மணிலா விரி­கு­டாவில் சேரிப் பிர­தே­சங்­க­ளி­லுள்ள வீடுகள் இந்த சூறா­வ­ளியால் கடும் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளன.

பெடான்கஸ் நகரில் சூறா­வ­ளியால் சேதமடைந்த கட்டட இடிபாடுகளின் கீழ் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு தேசிய செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts