Ad Widget

பிறந்து ஒருநாளான சிசு பற்றைக்குள் இருந்து சடலமாக மீட்பு

baby-jaffnaயாழ். நாவந்துறைப் பகுதியில் பிறந்து இறந்த ஒருநாளான சிசு ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்.நாவாந்துறை பொம்மை வெளிப் பகுதியிலே இந்த சிசு மீட்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் இந்தப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட சிசுவானது, வெள்ளைத் துணி ஒன்றினால் போர்க்கப்பட்டு பற்றை ஒன்றுக்குள் வீசப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்பட வில்லை. அத்தோடு இச்சிசுவை வீசி எறிந்த தாயார் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Posts