Ad Widget

பிரித்தானியாவை தாக்க தயாராகும் ரஷ்யா!! பிரித்தானியா வெளியிட்ட அவசர எச்சரிக்கை!!

பிரித்தானியா மீது ரஷ்யா தாக்குதலை நடத்தப்போகிறது என்கின்ற செய்திகள் கடந்த சில நாட்களாகவே உலகின் பிரதான ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன.

அச்சத்தில் ஆழ்த்தக்கூடிய இதுபோன்ற செய்திகள் ஒருபக்கம் சர்வதேச ஊடகங்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் அதேவேளை பிரித்தானிய அரசாங்கம் விடுத்திருந்த ஒரு அவசர அறிவிப்பும் மேலும் பிரித்தானிய மக்களை கலக்கத்தில் ஆழ்த்திருந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (23.04.2023) மாலை 3.00 மணிக்கு பிரித்தானியாவில் வசிக்கும் அனைவரினது தொலைபேசிகளிலும் ஒரு பரீட்சார்த்த அவசர எச்சரிக்கை எழுப்பப்படும் என்றும் அனைத்து தொலைபேசி இணைப்புகளின் வலையமைப்புக்களும் பிரித்தானிய அரசாங்கத்தினால் இடைமறிக்கப்பட்டு அந்த பரீட்சார்த்த எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

பிரித்தானியா மீது ரஷ்யா தாக்குதலை நடத்தலாம் என்கின்ற எச்சரிக்கைகள் பரவலாக வெளிவரும் நிலையில் ஒரு அவசர எச்சரிக்கை நடைமுறையை பிரித்தானிய அரசாங்கம் பொதுமக்கள் இடையில் அறிமுகப்படுத்தி இருப்பதானது பிரித்தானிய மக்கள் இடையே ஒரு அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts