Ad Widget

பிரபாகரன் மதிவதனிக்கு அரச நியமனம்?

event-14-6-2013யாழில் நேற்று நடைபெற்ற வடமாகாணசபைத் திணைக்களங்களில் தொண்டர்களாக கடமையாற்றியவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரபாகரன் மதிவதனி என்ற பெயருடைய ஒருவருக்கு நியமனம் வழங்கப்பட்டது.

குறித்த நபரை அழைத்தபோது அவரின் நியமனக் கடிதத்தில் உள்ள பெயரை அவதானித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதத்தில் உள்ள பெயரை பார்க்குமாறு ஆளுநரிடம் காட்டினார்.

குறித்த பெயரைப் பார்த்த ஆளுநர் மற்றும் யாழ். மேயர் யோகேஸ்வரி மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் தங்களுக்குள் சிரித்ததை அவதானிக்கக் கூடியாதாக இருந்தது.

Related Posts