Ad Widget

பிரதம செயலாளரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பொதுச்சேவை ஆணைக் குழுவுக்கே உண்டு; உயர்நீதிமன்று இன்று தீர்ப்பு

judgement_court_pinaiமாகாண சபை பிரதம செயலாளருக்கு உத்தரவிட பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது.

அந்த அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்று இலங்கை உயர்நீதிமன்றம் இன்று திர்ப்பு வழங்கியுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தனது அடிப்படை உரிமையில் தலையிடுகிறார் என்று தெரிவித்து வடக்கு மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் தாக்கல் செய்த மனு தீர்ப்பு க்காக இன்று உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், கே.ஶ்ரீபவன் மற்றும் ரோஹினி மாரசிங்க ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் வழக்கை விசாரித்தனர். இதன்போதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Posts