Ad Widget

பாரவூர்தி சங்க உரிமையாளர்கள் கவனயீர்ப்பு ஊர்வலம் நடத்த தீர்மானம்

S-jeya-kumarயாழ்.மாவட்ட பாரவூர்தி சங்கத்திலுள்ள பாரவூர்தி உரிமையாளர்கள், தாங்கள் தொழிலில்லாமல் இருக்கும் உண்மை நிலைமையை வெளிக்கொண்டு வரும் வகையில் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்துவதற்கு பாரவூர்திச் சங்க உரிமையாளர்கள் ஏகமனதாகத் தீர்மானம் எடுத்துள்ளதாக பாரவூர்தி சங்கத்தின் தலைவர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார்.

கோண்டாவில் கிழக்கு புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்கத்தின் அலுவலகத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற பாரவூர்தி உரிமையாளர்களுக்கிடையிலான கூட்டத்திலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்திலுள்ள பாரவூர்திகளுக்கு தொழிலில்லாமல் இருப்பதால் பாரவூர்தி உரிமையாளர்களின் குடும்பங்கள் மிகவும் கஷ்டமான நிலையினை அனுபவிப்பதாக உரிமையாளர்கள் கவலை வெளியிட்டனர். அத்துடன், தங்களின் பாரவூர்திகளுக்குத் தொழில் தருவதற்கு அரசாங்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக பாரவூர்தி உரிமையாளர்கள் இக்கூட்டத்தில் கூறியிருந்தனர்.

இதன்படி, மேற்படி தொழிலின்மையினை வெளிப்படுத்தும் முகமாக எதிர்காலத்தில் கவனயீர்ப்பு ஊர்வலமொன்றை நடத்துவதற்கு பாரவூர்தி உரிமையாளர்கள் அனைவரும் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts