Ad Widget

பாதையில் குவிக்கப்பட்ட சடலங்கள்! வாக்னர் படையினரின் கொடூர செயல் அம்பலம்!

வாக்னர் கூலிப்படையினர் தமது சொந்த வீரர்களை படுகொலை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விளாடிமிர் புடின் அரசாங்கத்திற்கு எதிராக வாக்னர் கூலிப்படையின் ஆயுத கிளர்ச்சியை ஆதரிக்காத சொந்த வீரர்களை படுகொலை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் மாஸ்கோவை கைப்பற்றும் நோக்கில் வாக்னர் கூலிப்படையினர் பயன்படுத்திய அதே பாதையில் தற்போது சடலங்கள் மீட்கபட்டுள்ளன.

கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையிலும், அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விவகாரத்தில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் வாக்னர் கூலிப்படை தளபதி ஒருவர் ரஷ்ய இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட வாக்னர் தளபதி Shekhovtsov உண்மையை ஒப்புக்கொண்டுள்ளதுடன், ஜூன் 24ம் திகதி வாக்னர் கூலிப்படை முன்னெடுத்த ஆயுத கிளர்ச்சியை ஆதரிக்காதவர்கள் இவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய அரசாங்கத்தை ஆதரிக்கும் வாக்னர் கூலிப்படையின் தளபதி ஒருவர் தொடர்புடைய படுகொலையை முன்னெடுத்துள்ள நிலையில் வாக்னர் கூலிப்படையில் சட்ட ஒழுங்கு இல்லை என்பது அம்பலமாகியுள்ளதாக கூறுகின்றனர்.

இதேவேளை வாக்னர் கூலிப்படையினர் உக்ரைனுக்கு ஆதரவான ரஷ்யர்களை முன்னர் சம்மட்டியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

ஆனால் தற்போது ரஷ்ய அரசாங்கத்திற்கு எதிரான ஆயுத கிளர்ச்சியில் ஆதரவளிக்காத வீரர்களை படுகொலை செய்யும் நிலைக்கு எட்டியுள்ளனர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts