Ad Widget

பாடசாலை மாணவி உயிரிழப்பு, நெடுந்தீவு மக்கள் ஆர்ப்பாட்டம்!

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்விகற்றுவந்த மாணவி ஒருவர் நெஞ்சுவலியென பாடசாலையிலிருந்து வைத்தியசாலைக்குக் கொண்டுசென்று அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, நேற்று நெடுந்தீவு மக்கள் பிரதேச வைத்தியசாலையின் தரம்போதாமை மற்றும் வைத்தியர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும், வைத்தியச் சிகிச்சை போதியளவில் அளிக்கப்படாமையினாலேயே குறித்த மாணவி நேற்று முன்தினம் (புதன்கிழமை) மரணமானார் எனவும் அம்மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யக்கோரியும், நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைய வைத்தியசாலையாக தரமுயரத்தவேண்டுமெனவும் நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்போது பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Related Posts