யாழ். இந்திய துணைத் தூதரகத்தால், மாதகல் நுனசை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவச புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வெள்ளிக்கிழமை (05) வழங்கப்பட்டன.
தூதரகத்தின் தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
பின்தங்கிய நிலையிலுள்ள இந்த பாடசாலைகளுக்கு உதவிகள் வேண்டும் என அதிபர் எஸ்.சிவநேசன் கேட்டுக்கொண்டதிற்கு அமைய மேற்படி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தூதரகத்தினர் தெரிவித்தனர்.