பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (22) நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
வழமைப்போல் பாடசாலை இயங்கி வந்த நிலையில், 2 மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில், பள்ளியில் இருந்த மாணவர்கள் 3 பேர் பலியானதுடன் மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக 2 பேரை பொலிஸார் கைது செய்து, விசாரணைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவர்களில் ஒருவர் அந்த பாடசாலையின் முன்னாள் மாணவர் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர்கள் 2 பேரும் ஆண்கள். இந்த துப்பாக்கி சூட்டுக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரிய வரவில்லை.
தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அந்த பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.