Ad Widget

பாகிஸ்தானில் பதற்றம் ! நால்வர் சுட்டுக் கொலை!! 500 மாணவர்கள் ஆபத்தில்!

பாகிஸ்தான் இராணுவ கல்லூரியில் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

gun-amerecca

இதில் முதல் கட்டமாக 25 மாணவர்கள் காயமுற்றதாகவும், 4 பேர் பலியானதாகவும் தெரிகிறது.

பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பெஷாவரில் உள்ள இராணுவ கல்லூரியில் பயங்கரவாதிகள் 500 மாணவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இதனையடுத்து பாகிஸ்தானில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு தெக்ரிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பள்ளிக்குள் 7 பயங்கரவாதிகள் நுழைந்திருப்பதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts