பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை பிணையில் விடுவித்து, மாத்தறை நீதவான் உரேஷா டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் மூன்றில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை நிதி குற்ற விசாரணைப் பிரிவில் அவர் ஆஜராக வேண்டும் எனவும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.