20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
அருகிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் அடுத்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை மாணவர்கள் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் என்று இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.