பலாலி இராணுவ முகாமின் இராணுவக் காவலரணில் கடமையிலிருந்த படைச் சிப்பாய் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் படுகாயமடைந்தார். சிப்பாய் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பலாலி இராணுவக் காவலரணில் கடமையிலிருந்த படைச் சிப்பாய் மீது முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் சுயாதீனமாக இந்தத் தகவலை உறுதி செய்ய முடியவில்லை.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது என்று வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
சிப்பாயின் கால் ஒன்று சிதைவடைந்துள்ளதுடன், இடுப்புப் பகுதியிலும் காயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர் சுயநினைவற்ற நிலையில் உள்ளதால் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.