யாழ். மாநகரப்பகுதியில் பராமரிப்பின்றி இருக்கும் காணிகளில் உள்ள பற்றைகளை உடன் அகற்றுமாறு மாநகராட்சி மன்றம் அந்தந்த காணிகளில் அறிவுறுத்தல் விளம்பரப் பலகைகளை நாட்டி வருகின்றது.
இருவாரங்களுக்குள் குறித்த காணிகளில் இருக்கும் பற்றைகள் அகற்றப்பட்டு உடன் துப்பரவு செய்யப்பட வேண்டும்.
அவ்வாறு துப்பரவு செய்யப்படாவிடின் 2007ஆம் ஆண்டு 11ம் இலக்க டெங்கு சட்டத்துக்கு அமைய மாநகராட்சி
மன்றத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த அறிவுறுத்தல் பலகைகைள் மாநகரப்பகுதியிலுள்ள கைவிடப்பட்ட காணிகள் உள்ள 132 இடங்களில் நட்டப்பட்டுள்ளன என்று ஆணையாளர் தெரிவித்தார்.