Ad Widget

பருத்தித்துறை அருகே மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் நேற்று (புதன்கிழமை) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகையை சேர்ந்த 22 மீனவர்களை கைது செய்த கடற்படையினர், அவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மயிலிட்டி துறைமுகத்திற்கு கடற்படையினர் கொண்டு சென்றுள்ளனர்.

Related Posts