Ad Widget

பருத்தித்துறையில் கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண் உயிரிழப்பு!!

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண் மறுநாளான இன்று உயிரிழந்துள்ளார்.

ஆசிரியை ஒருவருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் அவரது குடும்பத்தவர்களுக்கு ஏற்பட்ட தொற்றில் பாதிக்கப்பட்ட வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பு தொடர்பில் இறப்பு விசாரணைகளுக்குப் பணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வயோதிபப் பெண்ணின் உயிரிழப்பு தொடர்பில் உரிய நவடிக்கை எடுப்பது தொடர்பில் சுகாதார அமைச்சின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பருத்தித்துறை தும்பளை தெற்கைச் சேர்ந்த 75 வயதுடைய வயோதிப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

அவர் கடந்த 23ஆம் திகதி கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டமை கண்டறியப்பட்டது. அவரை நொச்சிகாமம் கோவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.

அங்கிருந்து கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் அமைந்துள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் நேற்று வீடு திரும்பினார். எனினும் இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

Related Posts