Ad Widget

பப்புவா நியூகினியா தீவில் 12கைதிகள் சுட்டுக்கொலை!

பப்புவா நியூக்கினியா தீவின் பெரிய நகரமான லேயிலுள்ள பயிமோ என்ற பெரிய சிறையிலிருந்து தப்பியோடிய பன்னிரண்டு கைதிகளை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பயிமோ சிறையின் முக்கிய நுழைவாயிலிற்கு அதிரடியாக நுழைந்த 94 இளைஞர்கள் அங்கிருந்த காவலாளிகளை மடக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். தகவலறிந்து பொலிசார் அவ்விடத்திற்கு வந்து சுட்டத்தில் பன்னிரண்டுபேர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 18பேர் காயமடைந்துள்ளனர், ஏனையோர் தலைமறைவாகியுள்ளனர்.

காயப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதால், வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தப்பி ஓடி தலைமறைவாயிருப்பவர்களைத் தேடும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளதாக சிறைத்துறை ஆணையாளர் பெர்னார்ட் நேபோ தெரிவித்துள்ளார்.

மேலும், தலைமறைவாயிருக்கும் கைதிகளால் நாட்டில் குற்றச்செயல்கள் ஏற்பட அதிகமான சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts