பண மோசடி – 4 முகாமையாளர்கள் உட்பட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்!!

கைது செய்யப்பட்ட தனியார் வர்த்தக வங்கியின் முகாமையாளர்கள் உட்பட ஐந்து பேரையும் செப்டம்பர் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்யாமல் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை பரிமாற்றம் செய்தமை தொடர்பில் அண்மையில் நான்கு தனியார் வர்த்தக வங்கி முகாமையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

ஏற்கனவே இந்த சம்பவத்தில் கைதான வர்த்தகரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றிருந்தது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts