Ad Widget

பட்டதாரிகளுக்கு ஒரு வாரத்திற்குள் நிரந்தர நியமனம்!

graduationஅரச துறையில் இணைத்துக்கொள்ளப்பட்ட நிரந்தர நியமனம் வழங்கப்படாத 27, 000 பட்டதாரிகளுக்கு ஒரு வாரத்திற்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி. அபேகோன் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்களை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மூலம் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பட்டதாரிகளுக்கு அந்தத்தப் பிரதேசத்திலேயே நிரந்தர நியமனப் பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்ப ட்டு வருவதாக குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் பட்டதாரிகளை அரச துறைக்கு தகைமை அடிப்படையில் உள்வாங்கப்பட்டு பட்டதாரி பயிலுனர்களாக ஒருவருட பயிற்சியை முடித்துக்கொண்டவர்களில் இதுவரை 20,000 இற்க்கு மேற்பட்டவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

இது மட்டுமல்லாது இன்னும் 27,000 பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என்பது தொடர்பில் அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கம் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்தன மற்றும் அமைச்சின் செயலாளர் பீ. அபேகோன் ஆகியோரது கவனத்திற்கும் கொண்டுவந்த போதே அமைச்சின் செயலாளர் பீ. அபேகோன் இவ்வாறு தெரிவித்தார்.

Related Posts