Ad Widget

பட்டதாரிகளின் நியமன வயதெல்லையை அதிகரிக்க நடவடிக்கை!

கிழக்கு மாகாண பட்டதாரிகளின் நியமன வயதெல்லையை 45ஆக உயர்த்துவதற்கான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுனர் ரோஹித பொகொல்லாகம ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னரே இந்த விடயங்களை கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர மேலும் தெரிவிக்கையில், ”நாட்டில் நிலவிய போர்க்கால சூழ்நிலைகளின் போது வடக்கு, கிழக்கில் பல பட்டதாரிகள் தமது பட்டப்படிப்பை தொடர்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர் கொண்டிருந்தனர்.

இதனால் தமது உரிய வயதில் பட்டப்படிப்பை நிறைவு செய்வதில் சிக்கல்களை எதிர் கொண்டமை போன்ற பல காரணங்கள் தொடர்பில் நாம் ஆராய்ந்திருந்தோம்.

கிழக்கு மாகாண பட்டதாரிகளின் நியமன வயதெல்லையை 45 ஆக உயர்த்துவதற்கு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வுகள் எட்டப்படுவதற்கான சாத்தியங்கள் கிட்டியுள்ளன.

இதனடிப்டையில் இது தொடர்பான ஒரு சாதகமான பதிலை குறித்த பட்டதாரிகளுக்கு வழங்கக்கூடியதாக இருக்கும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் அயராத முயற்சியின் பயனாக கிழக்கில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கான ளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் முதற்கட்டமாக 1700 பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான நியமனங்களும் விரைவில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts