Ad Widget

பசிலை வரவழைக்க நீதிமன்றத்தை நாடிய பொலிஸார்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை இலங்கைக்கு வரவழைப்பதற்கு, நீதிமன்ற உத்தரவை நாடியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

திவிநெகும திணைக்களத்தின் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே, அவரை இலங்கைக்கு வரவழைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதன் பின்னர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது மனைவியுடன் அமெரிக்காவுக்கு 11ஆம் திகதி புறப்பட்டுசென்றுவிட்டார்.

அத்துடன் அவர், நாடாளுமன்ற அமர்வுகளில் மூன்று மாதங்களுக்கு பங்குபற்றாமல் இருப்பதற்காக நாடாளுமன்றம் அனுமதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts