முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராபக்ஷவுக்கான விளக்கமறியல், மே மாதம் 7 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திவிநெகும நிதி மோசடி தொடர்பில் அவருடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் விளக்கமறியலும் 7ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.
கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.