Ad Widget

நோர்வே பிரதிநிதி யாழ் பாதுகாப்பு படைத்தளபதியை சந்தித்தார்!

நோர்வே பிரதிநிதியும் இலங்கைக்கான தூதுவரான தோர்போர்ன் காஸ்டாட்சேதர் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியை சந்தித்தார்.

யாழ் பலாலி தலைமையகத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருவருக்கும் இடையில் பாதுகாப்பு மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பினை நினைவுகூறும் வகையில் யாழ் பாதுகாப்பு படைத்தளபதியினால் நோர்வே தூதுவருக்கு நினைவு சின்னம் பரிசளிக்கப்பட்டது.

Related Posts