மீசாலை பகுதியில் நோயாளர் காவு வண்டியொன்று சனிக்கிழமை (13) மோதியதில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினார்கள்.
மந்துவில் மேற்கை சேர்ந்த யுவதாஸ் நிர்மலா (வயது 40), யுவதாஸ் கஜானா (வயது 08) என்பவர்களே படுகாயமடைந்துள்ளனர்.
ஏ – 9 வீதியில் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த வேளையில், இவர்கள் மீது நோயாளர் காவு வண்டி மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த இருவரும் முதலில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.