Ad Widget

நேற்றுடன் முடிவுக்கு வந்தது கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு

tnaவடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடுகள் தொடர்பான இழுபறி நிலைமை நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

வடக்கின் 5 மாவட்டங்களிலும் கட்சிளின் ஆசனப் பங்கீடுகள் திருப்திகரமாகப் பங்கிடப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன் பிரகாரம்,

யாழ். மாவட்டம்

தமிழரசு கட்சி – 7 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 4 ஆசனங்கள்
டெலோ – 3 ஆசனங்கள்
புளொட் – 2 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 2 ஆசனங்கள்

கிளிநொச்சி மாவட்டம்

தமிழரசு கட்சி – 3 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 1 ஆசனம்
டெலோ – 1 ஆசனம்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 2 ஆசனங்கள்

முல்லைத்தீவு மாவட்டம்

தமிழரசு கட்சி – 2 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 2 ஆசனங்கள்
டெலே – 2 ஆசனங்கள்
புளொட் – 1 ஆசனம்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 1 ஆசனம்

வவுனியா மாவட்டம்

தமிழரசு கட்சி – 2 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 2 ஆசனங்கள்
டெலோ – 2 ஆசனங்கள்
புளொட்- 2 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 1 ஆசனம்

மன்னார் மாவட்டம்

தமிழரசு கட்சி – 2 ஆசனங்கள்
டெலோ – 3 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 2 ஆசனங்கள்
புளொட் – 1 ஆசனம்

இந்த அடிப்படையில் ஐந்து மாவட்டங்களுக்கும் ஆசனப் பங்கீடுகள் நடைபெற்றிருப்பதாகவும் இதன் அடிப்படையில் கட்சிகள் வேட்பாளர்களை தெரிவு செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் 26ம் மற்றும் 27ம் திகதிகளில் வெளியிடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Related Posts