Ad Widget

நேர­டிப்­பேச்சு தொடர்பில் ஜனா­தி­பதியிடம் கேள்வி எழுப்­பிய ரம­போஷா

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் நேர­டிப் பேச்­சுக்­களை ஆரம்­பிப்­பது தொடர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்ன? என்று இலங்கை வந்துள்ள தென்­னா­பி­ரிக்­காவின் பதில் ஜனா­தி­பதி ரம­போஷா, ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க்ஷ­விடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

mahinth ramposha

தென்­னா­பி­ரிக்க பதில் ஜனா­தி­பதி ரம­போஷா தலை­மை­யி­லான தூதுக்­கு­ழு­வினர் நேற்று முன்­தினம் இரவு ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க்ஷவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர். இராப்­போ­சன விருந்­துடன் நடை­பெற்ற இந்த பேச்­சு­வார்த்­தை­யின்­போது ஜனா­தி­ப­தியும் ரம­போ­ஷாவும் தனிப்­பட்ட முறையில் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.

இதன்­போது பேச்­சு­வார்த்­தைக்கு பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவே சிறந்த இட­மாகும். இதன் மூலமே சகல தரப்­பி­னரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்வை காண­மு­டியும் என்று ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ எடுத்­துக்­கூ­றி­ய­தாக தெரி­கின்­றது.

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் நேரடிப் பேச்­சு­வார்த்­தை­யினை ஆரம்­பிப்­ப­துடன் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் நட­வ­டிக்­கை­க­ளையும் சமாந்­த­ர­மாக முன்­னெ­டுத்தால் சாத­க­மான நிலை தோன்றும். இவ்­வாறு கூட்­ட­மைப்­புடன் நேர­டிப்­பேச்­சு­வார்த்­தைகள் நடத்­து­வது தொடர்பில் உங்­க­ளது நிலைப்­பாடு என்ன என்று ரம­போஷா ஜனா­தி­ப­தி­யிடம் கேள்வி எழுப்­பி­ய­தாக தெரி­கின்­றது.

நேர­டிப்­பேச்­சுக்­களை ஆரம்­பிப்­ப­துடன் தெரி­வுக்­கு­ழுவின் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது தொடர்பில் கூட்­ட­மைப்­பி­னரின் நிலைப்­பாடு எப்­படி இருக்கும் என்­பது பற்றி முதலில் அறி­ய­வேண்டும். அதன் பின்­னரே இது குறித்து தீர்­மா­னிக்­கலாம் என்றும் ஜனா­தி­பதி தெரிவித்துள்ளார்.

இதன் போது கூட்டமைப்பினர் இணக்கம் தெரிவித்தால் நேரடிப்பேச்சுக்கு இணங்குவீர்களா என ரமபோஷா கேள்வி எழுப்பியுள்ளார். அது குறித்து சிந்திக்கலாம் என்று ஜனாதிபதி பதிலளித்ததாகவும் தெரிகின்றது.

Related Posts