Ad Widget

நேபாளத்திற்கான நிவாரண பொருட்கள் யாழ் மாவட்டச் செயலகத்தினால் சேகரிப்பு

நேபாளத்தில் இடம்பெற்ற பாரிய இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் நோக்கில் யாழ் மாவட்டச் செயலகம் உதவிப் பொருட்களை சேகரித்து வருகிறது.

உதவ விரும்புகிறவர்கள் இன்று (30) பொருட்களை பிரதேச செயலகத்துக்கு வழங்க முடியும்.

இதனடிப்படையில் கூடாரம் (Tents small, medium and large)-மெத்தைகள் (Mattress)-போர்வைகள் (Blankets)
நீர் தூய்மையாக்கும் கருவி (Water Purifiers)-சுகாதார பொருட்கள் (sanitation Kits)-மற்றும் வெளியில் தங்குவதற்கு பொருத்தமான உடைமைகள் (other similar materials useful for outstay)-என்பன மக்களிடமிருந்து கோரப்படுகின்றன.

இலங்கையிலிருந்து நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட செயலகங்களினூடாக நிவாரண பொருட்கள் வழங்கும் நோக்கில் சேகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts