யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அப்துல் கேசாப் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இச்சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது.
நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜன்டினது மனைவியின் காலில் வீழ்ந்து நீதிபதி அழுத காட்சியை பார்வையிட்ட அமெரிக்கத்தூதுவர், தாம் இதைக்கண்டு மனம் நெகிழ்ந்ததாக தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையிலேயே கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்கத்தூதுவர் கொழும்பில் வைத்து நீதிபதியை சந்தித்திருந்தார். இக்கலந்துரையாடலில், அமெரிக்கத்தூதுவர் நீதிபதியினை கண்டதும் அவரை கட்டியணைத்து கைலாகு கொடுத்திருந்தார். மேலும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நீதிபதி என்ற நிலையில் இருந்தும் கூட நீங்கள் நடந்து கொண்டவிதம் அனைத்தையும் தான் பார்த்ததாகவும் அதனால் தான் மிகுந்த மனநெகிழ்ச்சி அடைந்ததாகவும் இதன்போது அமெரிக்கத்தூதுவர் நீதிபதிக்கு தெரிவித்திருந்தார்.
மேலும் அமெரிக் கத் தூதுவர் என்ற வகையில் தன்னி டம் என்ன உதவி கள் வேண்டுமெனி னும் தன்னைத் தொடர்புகொள்ள லாம் என்றும் நீதிபதியிடம் அவர் உறுதியளித்திருந்தார்.