துளி நீரேனும் அருந்தாது உயிர்க்கொடை புரிந்த தியாகி திலீபனின் 29ஆவது நினைவு தினமான நேற்று திங்கட்கிழமை (26.09.2016) மாலை 6மணிக்கு நல்லூரில் அவரது இடித்தழிக்கப்பட்ட நினைவுத் தூபி அருகே நினைவுத் தீபங்களேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், பா. கஜதீபன் ஆகியோருடன் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு நினைவுத் தீபங்களேற்றி மலரஞ்சலி செய்துள்ளனர்.