Ad Widget

நாவாந்துறை மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்

யாழ். மாவட்டத்தில் அண்மைக் காலமாக எற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ். பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவாந்துறைப்பகுதியினை சேர்ந்த 316 குடும்பங்களுக்கான உலர்உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு யாழ். பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகின்றது.

இதனை முன்னிட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் அவர்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று நாவாந்துறை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் யாழ். பிரதேச செயலாளர் சுகுணரதி தெய்வேந்திரம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டு நாவந்துறை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட 50 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்தார்.

இதேவேளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் இரண்டு லட்சத்து எழுபதாயிரத்து எழுநூறு ரூபா நிதியுதவியுடன் உலர்உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts