Ad Widget

நால்வரை கடித்த நாயின் தலை கொழும்பிற்கு அனுப்பி வைப்பு

தெல்லிப்பழை பகுதியில் நால்வரை கடித்த பின்னர் உயிரிழந்த நாயினுடைய தலை பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமார் ஞாயிற்றுக்கிழமை (26) கூறினார்.

தெல்லிப்பழை சந்தியில் கடந்த வெள்ளிக்கிழமை (24) நடமாடித்திரிந்த மேற்படி நாய் வீதியால் சென்ற நால்வரை கடித்துள்ளது.

கடியுண்டவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.

இதனையடுத்து. நாயை பிடித்து கட்டி வைத்தபோது நாய் திடீரென வெள்ளிக்கிழமை (24) மாலை இறந்தது.

இதனையடுத்து நாய் இறந்ததிற்காக காரணத்தை கண்டறியவும், நாயினுடைய நோய் தன்மையை அறியவும் அதன் தலை வெட்டப்பட்டு கொழும்பிலுள்ள ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related Posts