Ad Widget

நாம் நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த வெற்றி இன்று எமக்கு மக்களால் பெற்றுத்தரப்பட்டுள்ளது! – ஜனாதிபதி

ஊவா மாகாண சபையில் மக்கள் எமக்கு பெற்றுத்தந்த வெற்றி என்பது நாம் இந்த நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த அமைதி, அபிவிருத்தி, பாதுகாப்பு, சுதந்திரம் என்பவற்றுக்கான மக்கள் ஆணை. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ.

mahintha

ஊவாமாகாண வெற்றி குறித்த அவர் வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்தச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-

நாம் தேர்தலில் வெற்றி பெற்றதன் விளைவாக நாட்டின் அபிவிருத்தியை மேலும் வேகப்படுத்த முடியும். ஊவா தேர்தலின்போது அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சிலர் முன்வைத்தனர். ஆனால் எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்து மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியுள்ளனர். நாட்டின் தேசிய நலனுக்கு எதிராகச் செல்ல எவரையும் அனுமதிக்கமுடியாது. மக்களும் இன்று அதையே விரும்புகின்றனர். ஊவா தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாப்பது அனைவரதும் கடமையாகும். என்றார்.

Related Posts