Ad Widget

நான்கு மாத சிசு உள்ளிட்ட 27 பேருக்கு வடக்கில் கொரோனா!

யாழ்.மாவட்டத்தில் 19 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் 147 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 27 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

இதன்படி யாழ்.மாவட்டத்தில் 5 சிறுவர்கள் உட்பட 19 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்து 4 மாதங்களேயான சிசுவுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும், வவுனியா மாவட்டத்தில் 2 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Posts