Ad Widget

நாட்டில் மீண்டும் ஆயிரத்தினைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் நேற்று(செவ்வாய்கிழமை) மேலும் ஆயிரத்து 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 12 ஆயிரத்து 322 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், தற்போது 18 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனைகளில் அல்லது வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 32 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதன்காரணமாக நாட்டில் இதுவரை 15 ஆயிரத்து 473 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Related Posts